அதேவேளையில் மற்றொரு புறம் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை உள்பட 7 மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அங்கு அதனை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள 12-ஆவது சிறப்பு தடுப்பூசி முகாமுக்கு பிறகு தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 வரை மட்டுமே தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறும். அதுமட்டுமல்லாது, இனி வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே சிறப்பு தடுப்பூசி முகாமை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வரும்.