கோவில்பட்டியைச் சேர்ந்த மற்றொரு விவசாயி கூறுகையில், தக்காளி மண்டிகளும், வணிகர்களும்தான், இந்த விலை உயர்வால் பெரும் லாபம் அடைந்தனர். ஓரளவுக்கு கொள்முதல் விலை உயர்ந்தது என்னவோ உண்மைதான். ஆனால், தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, தக்காளி விளைவித்த நிலப்பகுதிகளில் பெரும்பாலான செடிகள் அழுகிவிட்டன. விளைவித்ததில் பாதி தக்காளிதான் கொள்முதல் செய்யப்பட்டது. எனவே, கொள்முதல் விலை உயர்வு, அழுகிய தக்காளிக்கு ஈடாகத்தான் இருந்ததே தவிர, லாபம் என்று எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் விலை உயர்வு காரணமாக வணிகர்களும், தரகர்களும்தான் நல்ல லாபம் சம்பாதித்தனர். ஏனெனில் அவர்களுக்கு எந்த இழப்புமே இல்லையே என்கிறார்.