தொடர் பண்டிகைகளையொட்டி நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், அக்டோபர் 16-ஆம் தேதியும் பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமை (அக். 16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு விடுமுறை நாளான வியாழன், வெள்ளி கிழமைகளைத் தொடர்ந்து சனிக்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நாளை முதல் தொடர்ந்து நான்கு நாள்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.