புழல் ஏரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக புழல் ஏரியை ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 
கோப்புப்படம்
கோப்புப்படம்


வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக புழல் ஏரியை ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 22 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டின் முதல்வர் புழல் ஏரியை ஆய்வு செய்துள்ளார். 

தமிழகத்தில் அடுத்த நான்கு நாள்களுக்கு மாநிலத்தில் பரவலாக கனமழை  பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை அடுத்து மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 

இந்நிலையில், புழல் ஏரியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று புதன்கிழமை நேரில் ஆய்வு செய்து வருகிறார். 

ஏரியின் நீர் இருப்பு, மதகுகளின் உறுதித்தன்மை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த முதல்வர், நீர்வழிப்பாதைகளில் உள்ள ஆகாய தாமரையை அகற்றவும், கரையை பலப்படுத்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

புழல் ஏரியின் மொத்த கொள்ளவு 3.30 டி.எம்.சி.யில் தற்போது 2.77 டி.எம்.டி. தண்ணீர் உள்ளது. 

1999 இல் அன்றைய முதல்வர் கருணாநிதி புழல் ஏரியை ஆய்வு செய்தார். தற்போது 22 ஆண்டுகளுக்கு பின் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் புழல் ஏரியை ஆய்வு செய்துள்ளார். 

முதல்வருடன் அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் சந்தீப் மற்றும் மாவட்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com