தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? 

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்துக்கு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? 

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்துக்கு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், அடுத்த மூன்று மணி நேரத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யலாம். 
இதேபோல் கடலூர், சேலம், தருமபுரி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில்  கடந்த இரு தினங்களாக பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com