தமிழகத்தில் காலியாக இருந்த ஒரு மாநிலங்களவை இடத்துக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக சாா்பில் போட்டியிட்ட எம்.எம்.அப்துல்லா, மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வானார்.
மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை சட்டப்பேரவை செயலரிடமிருந்து பெற்றுக் கொண்டார் எம்.எம். அப்துல்லா.
மாநிலங்களவை உறுப்பினராக எம்.எம். அப்துல்லா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதையடுத்து, மாநிலங்களவையில் திமுகவின் பலம் 8 ஆக உயர்ந்துள்ளது.
அதிமுகவைச் சோ்ந்த மாநிலங்களவை உறுப்பினா் ஏ. முகம்மது ஜான் மறைவால் தமிழ்நாட்டில் காலியாக இருந்த மாநிலங்களவை இடத்திற்கு செப்டம்பா் 13-ஆம் தேதி இடைத் தோ்தல் நடைபெறும் என தோ்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், திமுக சாா்பில் எம்.எம்.அப்துல்லா, மட்டுமே வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தார்.
அவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், எம்.எம். அப்துல்லா மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, 2025 ஆம் ஆண்டு ஜூலை 24 வரை எம்.எம். அப்துல்லா மாநிலங்களவை உறுப்பினராக செயல்படுவார்.
வாழ்க்கைக் குறிப்பு:
பெயா் : எம்.எம். அப்துல்லா.
கல்வித்தகுதி: எம்.பி.ஏ.
பிறந்த தேதி: 30. 7. 1975
தந்தை: இஸ்மாயில்.
குடும்பம்: மனைவி ஜனத்தா அப்துல்லா மற்றும் இரு மகள்கள்.
கட்சி அனுபவம்: 2008-இல் திமுக பொதுக்குழு உறுப்பினா், 2014-இல் சிறுபான்மையினா் அணி துணைச் செயலா், 2018-இல் திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநிலத் துணைச் செயலா், 2021-இல் திமுக வெளிநாடு வாழ் தமிழா் அணி மாநில இணை செயலா்.