தேசிய நெடுஞ்சாலைகளில் 100 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் செல்லும் வகையில் மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
நெடுஞ்சாலைகளில் அதிகபட்ச வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டருக்கு குறைவாகவே இருக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
2018-ம் ஆண்டு எக்ஸ்பிரஸ் சாலைகளில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்திலும், தேசிய நெடுஞ்சாலைகளில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்திலும் செல்லலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
2013-ம் ஆண்டு காஞ்சிபுரத்தில் பல் மருத்துவர் விபத்தில் படுகாயமடைந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இதில் தேசிய நெடுஞ்சாலைகளில் 100 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் செல்லலாம் என்ற மத்திய அரசின் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும்,
உற்பத்தி செய்யப்படும் வாகனங்களுக்கு கட்டாயம் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும், இறக்குமதி வாகனங்களுக்கும் வேகக்கட்டுப்பாட்டு கருவி அவசியம் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் இதனை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், தேசிய நெடுஞ்சாலைகளில் 100 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் செல்லும் வகையில் மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!

பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் முன்னிலை!

காவிரி ஆற்றில் சுற்றித் திரியும் முதலைகள்: சுற்றுலாப் பயணிகள் அச்சம்

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 3 - நேரலை!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



