தேசிய நெடுஞ்சாலைகளில் 100 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் செல்லும் வகையில் மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
நெடுஞ்சாலைகளில் அதிகபட்ச வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டருக்கு குறைவாகவே இருக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
2018-ம் ஆண்டு எக்ஸ்பிரஸ் சாலைகளில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்திலும், தேசிய நெடுஞ்சாலைகளில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்திலும் செல்லலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
2013-ம் ஆண்டு காஞ்சிபுரத்தில் பல் மருத்துவர் விபத்தில் படுகாயமடைந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இதில் தேசிய நெடுஞ்சாலைகளில் 100 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் செல்லலாம் என்ற மத்திய அரசின் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும்,
உற்பத்தி செய்யப்படும் வாகனங்களுக்கு கட்டாயம் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும், இறக்குமதி வாகனங்களுக்கும் வேகக்கட்டுப்பாட்டு கருவி அவசியம் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் இதனை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், தேசிய நெடுஞ்சாலைகளில் 100 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் செல்லும் வகையில் மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி.கே. சிவகுமார் தலைமையில் அமோக வெற்றி.. கர்நாடகத்தின் 7 சட்டமேலவை இடங்களில் 5-ஐ கைப்பற்றிய காங்கிரஸ்!!

அமைதி ஒப்பந்தம்! சுவிட்சர்லாந்தில் நாளை அமெரிக்கா - ஈரான் பிரதிநிதிகள் நேரில் சந்திப்பு!
தமிழக காவலர்களின் பாதுகாப்புக்கு பிற மாநில காவல்துறையை நாட வேண்டும்போல: பாஜக

தவெகவினரிடம் இருந்து பெண்களை பாதுகாக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



