சென்னையில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. புதிதாக 198 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக கோவையில் 218 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஈரோட்டில் 117-ஆக இருந்த கரோனா பாதிப்பு இன்று 112-ஆக குறைந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக திருப்பூரில் 85 பேரும், தஞ்சாவூரில் 79 பேரும், சேலத்தில் 77 பேரும், திருச்சியில் 66 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் கரோனவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 198-ஆக குறைந்துள்ளது. இருவர் உயிரிழந்த நிலையில், 183 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் 12 வயதுக்கு உட்பட்ட 88 சிறார்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.