நீட் விலக்கு மசோதாவிற்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும்: மா.சுப்பிரமணியன்

நீட் விலக்கு மசோதாவிற்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 
மா.சுப்பிரமணியன்  (கோப்புப் படம்)
மா.சுப்பிரமணியன் (கோப்புப் படம்)


நீட் விலக்கு மசோதாவிற்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  ஏ.கே.ராஜன் தலைமையிலான ஆணையத்திற்கு 85 ஆயிரம் மனுக்கள் அளிக்கப்பட்டது.

நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆளுநர் நீட் விலக்கு மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் வழங்குவார். அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவருக்கு உடனடியாக அனுப்பப்படும். 

உலகின் பல்வேறு நாடுகள் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுத்து வருவதைப் போன்று மத்திய அரசும் தடுப்பூசி செலுத்த முன்வர வேண்டும் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com