லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரின் சிலை உடைப்பு: எல்லையில் இரு மாநில போலீசார் குவிப்பு 

ஆந்திரம் மாநில முன்னாள் முதல்வர் ராஜசேகர் ரெட்டியின் சிலை உடைப்பு சம்பவத்தால் பதட்டம் ஏற்பட்டுள்ளது. எல்லையில் இரு மாநில போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

News image
ஆந்திரம் மாநில முன்னாள் முதல்வர் ராஜசேகர் ரெட்டியின் சிலையை உடைத்த மர்ம நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டுள்ள ஓ.என். கொத்தூர் கிராமத்தினர்.
Updated On :24 செப்டம்பர் 2021, 6:29 am

DIN

கிருஷ்ணகிரி: ஆந்திரம் மாநில முன்னாள் முதல்வர் ராஜசேகர் ரெட்டியின் சிலை உடைப்பு சம்பவத்தால் பதட்டம் ஏற்பட்டுள்ளது. எல்லையில் இரு மாநில போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியை அடுத்த ஆந்திரம் மாநில எல்லையில் உள்ளது ஓ.என். கொத்தூர் கிராமம். இங்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் நிறுவனருமான ராஜசேகர ரெட்டியின் சிலை உள்ளது. 

Story image

கொத்தூர் கிராமத்தில் நிறுவப்பட்டிருந்து ஆந்திரம் மாநில முன்னாள் முதல்வர் ராஜசேகர் ரெட்டியின் சிலையை உடைத்து எடுத்துச் சென்ற சிமென்ட் கட்டை.

இந்த நிலையில்,  அந்த கிராமத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு மின்சாரத்தை துண்டித்த மர்ம நபர்கள்,  ராஜசேகர ரெட்டியின் சிலை உடைத்து, அங்கிருந்து முற்றிலும் அகற்றினர். வெள்ளிக்கிழமை அதிகாலை சிலை இல்லாததைக் கண்ட கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

மேலும் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல்  தெரிவித்த மக்கள், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிறுவனரின் சிலையை உடைத்த மர்ம நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதனால் தமிழகம் - ஆந்திரம்  மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இதையடுத்து, ஆந்திரம் மாநிலத்தைச் சேர்ந்த குடிப்பள்ளி காவல் நிலைய போலீசார், நிகழ்வு இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். 

ஆந்திரம் மாநில முன்னாள் முதல்வர் ராஜசேகர் ரெட்டியின் சிலை உடைப்பு சம்பவத்தால் பதட்டம் ஏற்பட்டுள்ளதை அடுத்து ஓ.என். கொத்தூர் கிராமத்தில் தமிழக, ஆந்திரம் மாநிலங்களின் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.