ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்த 4 மாதம் அவகாசம்: உச்சநீதிமன்றம்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு 4 மாத காலவகாசத்தை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.

News image
உச்சநீதிமன்றம்
Updated On :27 செப்டம்பர் 2021, 6:03 am

DIN

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு 4 மாத காலவகாசத்தை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவில்லை.

நகர்ப்புற தேர்தல் நடத்துவது குறித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், முன்பு நடைபெற்ற விசாரணையில் 7 மாதம் அவகாசம் வேண்டும் என தேர்தல் ஆணையம் கோரியிருந்தது.

இந்த நிலையில் இன்று விசாரணைக்கு வந்த வழக்கில் நீதிபதிகள் பேசியது:

தேர்தலை தள்ளிவைக்க தேர்தல் ஆணையம் கூறும் காரணங்கள் மிகவும் மோசமானதாக இருக்கிறது. அடுத்த 4 மாதத்திற்குள் தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.