நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நூல் விலை உயர்வு நீடித்தால் ஜவுளித்துறை முடங்கிவிடும்: விஜயகாந்த்

நூல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாகத் திரும்ப பெற வேண்டும் என்றும் இதேநிலை நீடித்தால் தமிழகத்தில் ஒட்டுமொத்த ஜவுளித்துறை முடங்கி விடும் என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். 

News image

கோப்புப்படம்

Updated On :2 ஏப்ரல் 2022, 7:49 am

DIN

நூல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாகத் திரும்ப பெற வேண்டும் என்றும் இதேநிலை நீடித்தால் தமிழகத்தில் ஒட்டுமொத்த ஜவுளித்துறை முடங்கி விடும் என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். 

பின்னலாடை உற்பத்தில் இந்தியாவின் மிகப்பெரும் மையமாகவும் சர்வதேச முக்கியத்துவம் பெற்ற நகரமாகவும் இருக்கும் திருப்பூரில்தான் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் 70 விழுக்காட்டிற்கும் அதிகமாக தயாராகின்றன. 

இந்நிலையில் பின்னலாடைகளின் முக்கிய மூலப் பொருளான நூலின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு ₹.230-க்கு விற்பனையான நூல் விலை கடந்த ஓராண்டில் மட்டும் ₹.160 வரை உயர்ந்துள்ளது. ஏழை நடுத்தர மக்களின் வயிற்றில் அடிக்கும் அனைத்து விலைவாசிகளின் உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மேலும் இதே நிலை நீடித்தால் ஒட்டுமொத்த ஜவுளித்துறை முடங்கி விடும். 

இதுதவிர பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, எண்ணெய் என அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டிய மத்திய, மாநில அரசுகள், அதனை மக்கள் மீது திணிப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று என்று விஜயகாந்த் தனது அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார். 

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.