தமிழகத்தில் இதுவரை அமலில் இருந்த பெரும்பாலான கரோனா கட்டுப்பாடுகள் நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல், கூட்டம் கூடுவதை தவிர்த்தல் போன்றவற்றை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால், தொற்றைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் முழுவதுமாக நீக்கப்படுகின்றன.
மாநில அரசு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியை 92 சதவிகிதமும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 75 சதவிகிதமும் செலுத்தியுள்ளது. இதன் காரணமாக தமிழக அரசு சார்பில் விதிக்கப்பட்டிருந்த கரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் திரும்பப்பெறப்படுகிறது.
எனினும் மக்கள் அனைவரும் சமூக இடைவெளியைக் கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல், கைகளை கழுவுதல், கூட்டம் கூடுவதை தவிர்த்தல் போன்றவற்றை கடைபிடித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொதுமக்கள் இதனைக் கடைபிடிப்பதை மாவட்ட துணை சுகாதாரத் துறை இயக்குநர்கள், சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலர், உள்ளூர் சுகாதாரத் துறை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுச்சேரியில் கவியரங்கம், விருதுகள் வழங்கும் விழா

136-ஆவது பிறந்த நாள்: பாரதிதாசன் சிலைக்கு ஆளுநா், அமைச்சா் மரியாதை

பிள்ளையாா்குப்பம் ஸ்ரீ கூத்தாண்டவா் கோயில் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

திருக்கோவிலூரில் தமிழ்க் கவிஞா் நாள் விழா
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


