பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சாத்தனூர் அணையிலிருந்து 45 நாள்களுக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் அடுத்த 45 நாள்களுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

News image
Updated On :4 ஏப்ரல் 2022, 10:47 am

DIN

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் அடுத்த 45 நாள்களுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

வருகிற ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை 166.40 மி.க.அடி தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூர் அணையிலிருந்து 2021-2022 ஆம் ஆண்டிற்கு சாத்தனூர் இடது மற்றும் வலதுபுறக் கால்வாய்களின் ஏரிகளுக்கு நாள் ஒன்றுக்கு முறையே 140 க.அடி/வினாடி மற்றும் 160 க.அடி/வினாடி வீதம் மொத்தம் 300 கனஅடி/வினாடி தண்ணீரை 04.04.2022 முதல் 19.05.2022 வரை 45 நாள்களுக்கு தொடர்ச்சியாக 1166.40 மி.க. அடி தண்ணீர் திறந்து விடவும்,

திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு நிலங்களுக்கு உரிமை நீர் 800 மி.க.அடி நீரினை நீர் பங்கீடு விதிகளின்படி ஏப்ரல் 30-க்குள் விவசாயிகளின் கோரிக்கைப்படி தேவைப்படும்பொழுது மூன்று தவணைகளில் சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடவும் அரசு ஆணையிட்டுள்ளது.

இதனால் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலுள்ள 12,543 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.