ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சீமை கருவேலம்: தமிழக அரசுக்கு 2 மாதங்கள் அவகாசம்

தமிழகத்தில் சீமைக்கருவேலம் மரங்களை அகற்றுதல் குறித்து இறுதி கொள்கை முடிவை அறிவிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் 2 மாதங்கள் அவகாசம் வழங்கியுள்ளது. 

News image
Updated On :4 ஏப்ரல் 2022, 9:33 am

DIN

தமிழகத்தில் சீமைக்கருவேலம் மரங்களை அகற்றுதல் குறித்து இறுதி கொள்கை முடிவை அறிவிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் 2 மாதங்கள் அவகாசம் வழங்கியுள்ளது. 

தமிழகத்தில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்றக்கோரி மதிமுக பொது செயலாளா் வைகோ உள்ளிட்டோா் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உயா் நீதிமன்றம், சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்டது. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி, நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், டி.பரதசக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கில் இறுதி கொள்கை முடிவை அறிவிக்க தமிழக அரசுக்கு 2 மாதங்கள் அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக அரசு அவகாசம் கேட்ட நிலையில் 2 மாதங்கள் அளித்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

இதையடுத்து இவ்வழக்குகளை ஜூன் முதல் வாரத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.