மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியை வழங்கவில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழகத்தில் மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியை மத்திய அரசு வழங்கவில்லை என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். 
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியை மத்திய அரசு வழங்கவில்லை என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். 

இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''தமிழகத்தின் மின் உற்பத்திக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில் மத்திய அரசு 48 ஆயிரம் முதல் 50 டன் நிலக்கரி மட்டுமே வழங்குகிறது.

இந்த ஆண்டில் தமிழகத்துக்குத் தேவையான 17,300 மெகா வாட் மின்சாரம் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த அதிமுக ஆட்சியில் புதிய மின் திட்டங்கள் எதுவும் கொண்டு வரப்படவில்லை. 

நிலக்கரி பற்றாக்குறையை போக்குவதற்காக முதல்வரின் வழிகாட்டுதலின் படி 4.8 ளாஸா டன் இறக்குமதி செய்வதற்காக ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளன. 

இந்த ஆண்டு வெளிச்சந்தையிலிருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டாலும், அடுத்த ஆண்டு மாநிலத்தின் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய அளவில் மின்சார உற்பத்தி அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com