இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய அடிக்கல் நாட்டுவிழா. எனக்கு என்ன சந்தேகம் என்றால், இது அடிக்கல் நாட்டுவிழாவா? அல்லது தொழிற்சாலையினுடைய துவக்க விழாவா? என்று சந்தேகப்படக்கூடிய அளவிற்கு, அடிக்கல் நாட்டு விழா என்றால், ஒரு ஹாலில், ஒரு சின்ன அரங்கத்திற்குள், ஒரு 100 பேர், 200 பேரை கொண்டு அதிகாரிகள், முக்கியமான அலுவலகர்களை மட்டும் உட்கார வைத்து அடிக்கல் நாட்டு விழாவை நடத்துவதுண்டு. ஆனால் இது, ஏதோ பெரிய திறப்பு விழா நிகழ்ச்சியைப் போல அமைந்திருக்கிறது. அடிக்கல் நாட்டு விழாவுக்கே இந்தக் கூட்டம் என்று சொன்னால், இந்தப் பணிகள் எல்லாம் முடிந்து அதனுடைய திறப்பு விழா நடக்கிறபொழுது என்ன கூட்டம் வரும் அப்படியென்ற எண்ணம் தான் எனக்கு இப்பொழுது வந்திருக்கிறது.