திமுகவின் பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காய்ச்சல் காரணமாக நேற்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்காத துரைமுருகன், சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், இன்று காலை சட்டப்பேரவை கூட்டத்திற்கு வருவதற்கு முன்னதாக மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், துரைமுருகனின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.
மேலும், சிகிச்சை முடிவடைந்து இன்று மாலை துரைமுருகன் வீடு திரும்புவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.