புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் சுவாமி திருக்கல்யாண வைபவம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில்  நடைபெற்று வரும் சித்திரைத் திருவிழாவில் வியாழக்கிழமை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் சுவாமி திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது.

News image

மானாமதுரை சித்திரைத் திருவிழாவில் திருக்கல்யாணம் முடிந்து திருமணங்கல்ய நாணுடன்  அருள்பாலிக்கும் ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் பிரியாவிடை சமேதமாய் ஸ்ரீசோமநாதர் சுவாமி.

Updated On :14 ஏப்ரல் 2022, 9:22 am

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில்  நடைபெற்று வரும் சித்திரைத் திருவிழாவில் வியாழக்கிழமை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் சுவாமி திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.

மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 8 ஆவது நாள் விழாவாக நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு ஆனந்தவல்லி அம்மனும் பிரியாவிடை சமேதமாய் சோமநாதர் சுவாமியும் சர்வ அலங்காரத்தில் கீழப்பசலை கவுல் சுப்ரமணியர் அய்யர் மண்டபத்தில் கண்ணூஞ்சலாகி மாலை மாற்றி அதன் பின்னர் எஸ்.பி.பொன்னம்பலம் பிள்ளை குமாரர்கள் மண்டகப்படியான திருக்கல்யாண மேடைக்கு எழுந்தருளினர். பின்பு திருமணத்திற்கான சம்பிரதாய பூஜைகள் தொடங்கி நடைபெற்று முடிந்ததும் மாலை மாற்றும் நிகழ்வு நடத்தப்பட்டது. 

அதைத்தொடர்ந்து காலை 11.20 மணிக்கு  சோமநாதர் சுவாமி சார்பில் ஆனந்தவல்லி அம்மனுக்கும் பிரியாவிடைக்கும் திருமாங்கல்ய நாண் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதன் பின்னர் அம்மனுக்கும் சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. கோயிலுக்குள் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கல்யாண வைபவத்தைக் கண்டு தரிசித்தனர்.

திருக்கல்யாண நிகழ்வுகளை சோமாஸ் கந்தன் பட்டர்,ராஜேஷ் பட்டர், தெய்வசிகாமணி என்ற சக்கரைப் பட்டர் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர். கோயிலுக்குள் இருந்த திருமணமான பெண்கள் புது திருமாங்கல்ய கயிறு மாற்றிக் கொண்டனர்.  ஏராளமான பெண்கள் கோயிலில் மாவிளக்கு பூஜை நடத்தி வேண்டுதல் நிறைவேற்றினர். திருக்கல்யாணம் முடிந்ததும் கோயிலில் பக்தர்களுக்கு திருமண விருந்து அளிக்கப்பட்டது. 

மேலும் பக்தர்களுக்கு திருமாங்கல்ய கயிறு குங்குமம் பிரசாதம் வழங்கப்பட்டது. திருக்கல்யாணத்தை காண வந்த பக்தர்கள் கோவிலுக்குள் திருமணத்திற்கு மொய் எழுதிச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.