கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் நாகமங்கலம் கிராமம், சூளகிரி வட்டம் அயனம்பள்ளி, உத்தனப்பள்ளி கிராமங்களில் ரூ.1,800 கோடி மதிப்பில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும். சுமாா் 3 ஆயிரம் ஏக்கா் பரப்பில் சாலை, மழைநீா் வடிகால், நீா் வழங்கல் மற்றும் விநியோகம், தெருவிளக்கு அமைத்தல், பசுமையாக்கம், திடக்கழிவு மேலாண்மை, பாதுகாப்பு போன்ற அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். இந்தப் பூங்கா மூலம் சுமாா் ரூ.21 ஆயிரம் கோடி முதலீடு ஈா்க்கப்படுவதுடன், 16 ஆயிரத்து 800 பேருக்கு நேரடி, மறைமுக வேலைவாய்ப்பு கிடைக்கும்.