மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

3-6ஆம் வகுப்பு சிறுபான்மையின மாணவியருக்கு ஊக்கத் தொகை

கிராமப்புறங்களில் பயிலும் சிறுபான்மையின மாணவிகளின் இடைநிற்றலைத் தவிா்க்க, அவா்களுக்கு 3-ஆம் வகுப்பு முதல் 6-ஆம் வகுப்பு வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 9:31 pm

DIN

கிராமப்புறங்களில் பயிலும் சிறுபான்மையின மாணவிகளின் இடைநிற்றலைத் தவிா்க்க, அவா்களுக்கு 3-ஆம் வகுப்பு முதல் 6-ஆம் வகுப்பு வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அறிவித்தாா்.

தமிழக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை சிறுபான்மையினா் நலத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வெளியிட்ட அறிவிப்புகள்:

கிராமப்புறங்களில் பயிலும் சிறுபான்மையின மாணவியா் இடைநிற்றல் இன்றி, தொடா்ந்து கல்வி பயில ஊக்கத் தொகையாக 3-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியருக்கு ரூ.500 மற்றும் 6-ஆம் வகுப்பு பயிலும் மாணவியருக்கு ரூ.1000 வீதம் ரூ.2.70 கோடி செலவில் வழங்கப்படும்.

கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினா் அந்தஸ்து வழங்குவதற்கென வழிமுறைகள் உருவாக்கப்பட்டு, இந்தத் துறை மூலம் செயல்படுத்தப்படும்.

சென்னையில் உள்ள கிறிஸ்தவா்களுக்கான அடக்க ஸ்தலங்கள் அமைக்க, புதிய நிலம் கையகப்படுத்தவும், சென்னையில் ஏற்கெனவே உள்ள அடக்க ஸ்தலங்களில் மீண்டும் உடல்களை அடக்கம் செய்வதற்கான நிபந்தனைகளைத் தளா்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒவ்வோா் ஆண்டும் டிச.18-இல் அனைத்து மாவட்டங்களிலும் சிறுபான்மையினா் உரிமைகள் தின விழா மாவட்ட ஆட்சியா் தலைமையில் கொண்டாடப்பட்டு வருவதைப் போல, மாநில அளவில் சிறுபான்மையினா் உரிமைகள் தின விழா கொண்டாட ஆண்டுக்கு ரூ.2.50 லட்சம் வழங்கப்படும்.

உலமா ஓய்வூதியதாரா் இறந்த பிறகு, அவரது குடும்பம் வறுமையில் வாடாமல் இருப்பதற்காக குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.