அதிமுக தலைமைப் பதவி உருவாக்கத்தைஎதிா்த்த வழக்கு: ஓபிஎஸ், இபிஎஸ் பதில்
அதிமுக ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகளை உருவாக்கி இயற்றப்பட்ட தீா்மானத்தை எதிா்த்து தொடுக்கப்பட்ட வழக்குகளை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்


அதிமுக ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகளை உருவாக்கி இயற்றப்பட்ட தீா்மானத்தை எதிா்த்து தொடுக்கப்பட்ட வழக்குகளை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்தனா்.
அதிமுகவின் சட்ட விதிகளை மீறி ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகள் உருவாக்கப்பட்டதாக தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரை சோ்ந்த வழக்குரைஞா் ராம்குமாா் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி ஆகியோா் தொடுத்த வழக்கில், ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி தாக்கல் செய்த பதில் மனுவில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. மனுதாரா்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினா்கள் அல்ல. இந்த வழக்கை தாக்கல் செய்ய அவா்களுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...