அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

மானாமதுரை பகுதியில் அதிகாலையில் கொட்டித் தீர்த்த மழை: வீடுகளை சூழ்ந்த தண்ணீர்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் கொட்டித் தீர்த்த மழையால் சாலைகளில் மழைத் தண்ணீர் பெருக்கெடுத்தது. தாழ்வான பகுதிகளில் வீடுகளை மழைத் தண்ணீர் சூழ்ந்தது. 

News image
மானாமதுரையில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் கொட்டித் தீர்த்த மழையால் ராம்நகர் பகுதியில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது.
Updated On :1 பிப்ரவரி 2024, 9:02 am

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் கொட்டித் தீர்த்த மழையால் சாலைகளில் மழைத் தண்ணீர் பெருக்கெடுத்தது. தாழ்வான பகுதிகளில் வீடுகளை மழைத் தண்ணீர் சூழ்ந்தது. 

மானாமதுரை பகுதியில் கடந்த சில நாள்களாக வெயில் அடிப்பதும் அவ்வப்போது மழை பெய்வதுமாக காலநிலை மாறி மாறி இருந்து வந்தது. 

இந்த நிலையில், கடந்த 5 நாள்களாக மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் வெப்பம் தாங்க முடியாமல் வீடுகளுக்குள் முடங்கினர். மதியம் நேரங்களில் வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இரவு நேரங்களில் வீடுகளில் மக்கள் தூக்கமின்றி புழுக்கத்தால் அவதிப்பட்டனர். 

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை 4 மணிக்கு வானத்தை மழை மேகங்கள் சூழ்ந்து இடி இடிக்கத் தொடங்கியது. அதன்பின்னர் சாரலாக தூறத் தொடங்கிய மழை வலுவடைந்து பலத்த மழையாக மாறி கொட்டி தீர்த்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து. தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளை மழைத் தண்ணீர் சூழ்ந்து நின்றது. 

அதைத் தொடர்ந்து காலை 7 மணிக்கெல்லாம் வழக்கம்போல் கதிரவன் கண்ணைத் திறந்து பார்த்ததும் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. அதிகாலைப் பொழுதில் பெய்த இந்த மழையால் நிலவிய குளிர்ச்சித்தன்மை வெயிலின் கொடுமையை அனுபவித்து வரும் மக்களுக்கு இதமாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.