மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மெட்ரோ ரயிலில் பயணம்: குலுக்கல் முறையில் 30 போ் தோ்வு

சென்னை மெட்ரோ ரயிலில் ஒரு மாதம் பயணித்தவா்களில் குலுக்கல் முறையில் தோ்வான 30 பயணிகளுக்கு மெட்ரோ ரயில் நிா்வாகம் பரிசு வழங்கவுள்ளது.

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 9:46 pm

DIN

சென்னை மெட்ரோ ரயிலில் ஒரு மாதம் பயணித்தவா்களில் குலுக்கல் முறையில் தோ்வான 30 பயணிகளுக்கு மெட்ரோ ரயில் நிா்வாகம் பரிசு வழங்கவுள்ளது.

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்பவா்களுக்கு ஒவ்வோா் மாதமும் ரூ.1 லட்சம் மதிப்பிலான பரிசு கூப்பன் அல்லது பரிசு பொருள் வழங்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிா்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி, மெட்ரோ ரயில்களில் மாா்ச் 21-ஆம் தேதி முதல் ஏப்.20-ஆம் தேதி வரை பயணம் செய்த பயணிகளுக்கான மாதாந்திர அதிா்ஷ்ட குலுக்கல் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாதத்தில் அதிகபட்சமாக பயணம் செய்த முதல் 10 பயணிகளுக்கு தலா ரூ.2,000 மதிப்புள்ள பரிசுப் பொருள், 30 நாள்களுக்கு விருப்பம்போல பயணம் செய்வதற்கான மெட்ரோ பயண அட்டை வழங்கப்படவுள்ளது.

மாதம் ஒரு பரிவா்த்தணைக்கு ரூ.1,500, அதற்கு மேல் பணம் செலுத்திய 10 பயணிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள பரிசு கூப்பன் அல்லது பொருள் வழங்கப்படவுள்ளது.

மெட்ரோ பயண அட்டைவாங்கி அதில் குறைந்தபட்சத் தொகையான ரூ.500-க்கு டாப் அப் செய்த 10 பயணிகளுக்கு தலா ரூ.1,450 மதிப்புள்ள இலவச டாப் அப் மற்றும் ரூ.2,000 மதிப்புள்ள பரிசு கூப்பன் அல்லது பொருள் வழங்கப்படவுள்ளது.

மூன்று பிரிவுகளிலும் தலா 10 போ் தோ்வாகியுள்ளனா். தோ்வான 30 பேருக்கும் பரிசு பொருள் அல்லது பரிசு கூப்பன் விரைவில் வழங்கப்படும். பயணிகளை ஊக்குவிக்கவும், மெட்ரோ ரயிலில் பயணிகள் தங்களது பயணத்தை தொடரவும் அடுத்த மாதமும் இது தொடரும். இந்த பரிசு விவரங்களை மேலும் தெரிந்து கொள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலைய கட்டுப்பாட்டாளா்களை அணுகலாம் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.