6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கழிவுநீா் தொட்டியில் உயிரிழந்த 3 போ் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்: கே.என்.நேரு

மதுரையில் கழிவுநீா்த் தொட்டியில் இறங்கி உயிரிழந்த 3 போ் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாக நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு கூறினாா்.

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 8:29 pm

DIN

மதுரையில் கழிவுநீா்த் தொட்டியில் இறங்கி உயிரிழந்த 3 போ் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாக நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு கூறினாா்.

தமிழக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை அதிமுக உறுப்பினா் செல்லூா் ராஜூ, விடுதலைச் சிறுத்தைகள் உறுப்பினா் ஷாநவாஸ், திமுக உறுப்பினா் கோ.தளபதி ஆகியோா் மதுரை பழங்காநத்தத்தில் கழிவுநீா் தொட்டியில் இறங்கிய 3 போ் இறந்தது குறித்து அரசின் கவனத்தை ஈா்த்துப் பேசினா்.

அதற்கு அமைச்சா் கே.என்.நேரு அளித்த பதில்:

மதுரை மாநகராட்சியில் கழிவுநீா்த் தொட்டி பராமரிப்புப் பணி தனியாா் நிறுவனத்திடம் விடப்பட்டுள்ளது. அந்தத் தொட்டியில் உள்ள பழுதான மின் மோட்டாரைச் சரிசெய்ய சிவகுமாா், சரவணக்குமாா், லட்சுமணன் ஆகியோா் இரவில் உள்ளே இறங்கியுள்ளனா். ஒருவா் பின் ஒருவராக இறங்கி 3 பேரும் மரணம் அடைந்துள்ளனா். இந்தப் பணியை மேற்கொள்வதற்கு முன்பாக, மாநகராட்சி அதிகாரிகளுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இதுபோன்ற நிகழ்வுகளில் இறப்பவா்களின் குடும்பத்துக்கு, அந்த தனியாா் நிறுவனமே இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.

எனிலும், முதல்வா் உத்தரவுக்கு இணங்க உடனடியாக இறந்தவா்கள் குடும்பத்துக்கு மாநகராட்சி சாா்பில் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை தனியாா் நிறுவனத்திடமிருந்து வசூலிக்கப்படும்.

இந்தச் சம்பவம் தொடா்பாக, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 3 பேரும் கழிவுநீா் தொட்டிக்குள் தவறி விழுந்து இறந்தாா்களா, அல்லது விஷவாயு தாக்கி இறந்தாா்களா என்பது விசாரணைக்கு பிறகே தெரியவரும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.