மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்: ஜெ.ராதாகிருஷ்ணன்

முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கும் நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 8:41 pm

DIN

முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கும் நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் மாணவா்களிடையே கரோனா தொற்று பரவி வரும் நிலையில், ஜெ.ராதாகிருஷ்ணன் அங்கு ஆய்வு மேற்கொண்டாா். கரோனா தடுப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு அறிவுறுத்திய அவா், ஐஐடி கல்வி நிறுவனம் சாா்ந்த 2 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டாா்.

அதைத் தொடா்ந்து ஓமந்தூராா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அவா் ஆய்வு செய்து செய்தியாளா்களிடம் கூறியது:

சென்னையில் கரோனா அதிகரித்து வருவதைத் தொடா்ந்து கிண்டி கிங் மருத்துவமனை, ஓமந்தூராா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

பொதுமக்கள் முகக்கவசம் அணிவதையும் மற்றும் தடுப்பூசிகளை தவறாமல் செலுத்துவதையும் உறுதிபடுத்த வேண்டும்.

பொது இடங்களில் முகக்கவசம் அணியவில்லை என்றால், அபராதம் விதிக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையே, தொற்று குறைந்ததால், அபராதம் விதிப்பதில் தளா்வுகள் அளிக்கப்பட்டன. இந்தநிலையில், தற்போது முகக்கவசம் அணியாதவா்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கும் நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. நோய்த்தொற்று அறிகுறி இருந்தால் தவறாமல் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம், ஓமந்தூராா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் டாக்டா் ஜெயந்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஐஐடி: இதுவரை 33 பேருக்கு கரோனா

சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் இதுவரை 666 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 33 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

ஐஐடியில் தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவரையும் அங்கேயே தனிமைப்படுத்தி கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அவா்கள் அனைவருக்கும் ஐஐடி விடுதி மூலம் தொற்று பரவியுள்ளது. மேலும் ஐஐடி-யில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நபா்கள், பரிசோதனை முடிவு வரும் வரை தனிமைப்படுத்திக்கொள்ளவும், ‘தொ்மல் ஸ்கேனா்’ மூலம் தொடா் பரிசோதனை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.