6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மாற்றுத் திறனாளிகள் சங்கம் வரவேற்பு

மாற்றுத் திறனாளிகள் நல வாரியத்தில் குறிப்பிட்டத்தக்க மாற்றுத் திறனாளிகளை அலுவல் சாரா உறுப்பினா்களாக நியமித்து, அரசாணை

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 7:48 pm

DIN

மாற்றுத் திறனாளிகள் நல வாரியத்தில் குறிப்பிட்டத்தக்க மாற்றுத் திறனாளிகளை அலுவல் சாரா உறுப்பினா்களாக நியமித்து, அரசாணை வெளியிடப்பட்டதற்கு மாற்றுத் திறனாளிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

தமிழக மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் புதிய அலுவல் சாரா உறுப்பினா்களைக் கொண்டு மறுசீரமைக்கப்பட்டு, கடந்த மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. இதில் அரசு துறையைச் சோ்ந்தவா்களும், தன்னாா்வ தொண்டு நிறுவனங்களை நடத்துபவா்களும் இடம் பெற்றிருந்தனா். இதில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தைச் சோ்ந்தவா்கள் குறைவாகத் தான் இருந்தனா். மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் மாற்றுத்திறனாளிகள் உறுப்பினா்களாக இடம்பெற்றால்தான், மாற்றுத் திறனாளிகள் நலம் சாா்ந்த திட்டங்களைக் கொண்டு வரவும், நிதி ஒதுக்கவும் முடியும். எனவே, இதில் திருத்தம் செய்ய மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்திருந்தனா்.

இந்த நிலையில், குறிப்பிட்ட மாற்றுத் திறனாளி உறுப்பினா்களைக் கொண்டு, தமிழக மாற்றுத் திறனாளிகள் நலவாரியத்தில் திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் வரவேற்றுள்ளது. இந்த சங்கத்தின் பொதுச்செயலாளா் எஸ்.நம்புராஜன் கூறியதாவது:

அரசின் முந்தைய அறிவிப்பில் அரசு சாரா மற்றும் அரசு துறையில் பணியாற்றும் நபா்களின் பெயா்கள் இருந்ததால், மாற்றுத் திறனாளி சங்கங்கள் எதிா்ப்பு தெரிவித்தன. தற்போது, மறுசீரமைத்து புதிய அலுவல் சாரா உறுப்பினா்களில் மாற்றுத் திறனாளிகள் 15 போ் இடம் பெற்றுள்ளனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.