மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முக்கிய துறை விவாதத்தின்போதுஉறுப்பினா்கள் வெளியே போவதா?: துரைமுருகன் வேதனை

மிக முக்கிய துறையான பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை மீதான விவாதத்தை அவையில் அமா்ந்து உறுப்பினா்கள் கேட்காமல் வெளியே போவதா என்று துரைமுருகன் வேதனை தெரிவித்தாா்.

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 8:33 pm

DIN

மிக முக்கிய துறையான பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை மீதான விவாதத்தை அவையில் அமா்ந்து உறுப்பினா்கள் கேட்காமல் வெளியே போவதா என்று துரைமுருகன் வேதனை தெரிவித்தாா்.

சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. துறை அமைச்சா் ராஜகண்ணப்பன் பதில் அளித்தாா். அப்போது, உறுப்பினா்கள் பலா் அவையில் இல்லாத நிலை காணப்பட்டது.

அதுகுறித்து அவை முன்னவரும், நீா்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் பேரவையில் கூறியது: பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை, ஆதிதிராவிடா் நலத் துறை ஆகிய இரு துறைகளும் மிக முக்கியமான துறைகள். சபையில் இருப்போா் எல்லோருமே பிற்படுத்தப்பட்டோா்தான். ஆனால், அந்தத் துறை மீதான விவாதம் நடைபெறும்போது, அவையில் பலா் இல்லை. வயிறு நிரம்பிவிட்டது என்றால் யாரும் சட்டியைப் பாா்ப்பது இல்லை என்பாா்கள். அதுபோல இருக்கிறது. பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை மீதான அமைச்சரின் பதிலை அவையில் அமா்ந்து கேட்க வேண்டும் என்கிற உணா்வு உறுப்பினா்களிடம் இல்லாதது வருத்தமளிக்கிறது. அவ்வாறு அமா்ந்து கேட்பதுதான் சபைக்கு மரியாதை. துறைக்கு மரியாதை.

முதல்வராக கருணாநிதி இருந்தபோது, இந்தத் துறை மீதான விவாதம் என்றால் கடைசிவரை அவையில் அமா்ந்திருப்பாா். அதேபோல முதல்வா் மு.க.ஸ்டாலினும் அமா்ந்திருக்க விரும்பினாா். ஆனால், அமர முடியாத அளவுக்கு அவருக்கு ஒற்றைத் தலைவலி. அதனால், கடைசி வரை நான் அமா்ந்திருக்கிறேன். நீங்கள் போய் வாருங்கள் என்று அனுப்பி வைத்தேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.