ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கீழையூர் ஸ்ரீரங்கநாதப் பெருமாள் ஆலய தேரோட்டம்

கீழையூர் ஸ்ரீரங்கநாத பெருமாள் ஆலயத்தில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருத்தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

News image
கீழையூர் ஸ்ரீரங்கநாத பெருமாள்
Updated On :24 ஏப்ரல் 2022, 4:28 am

DIN


கீழையூர் ஸ்ரீரங்கநாத பெருமாள் ஆலயத்தில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருத்தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

ஸ்ரீரங்கத்திற்கு இணையாக கீழ் அரங்கம் என அழைக்கப்படும் கீழையூரில் ஸ்ரீரங்கநாயிகா சமேத ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவில்  அமைந்துள்ளது. இக்கோயிலில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

Story image

பக்தி பரவசத்துடன் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

தொடர்ந்து பின்னைக்கிளை வாகனம், சேஷ வாகனம், கருடசேவை,அனுமந்த வாகனம், யானை வாகனம், புஷ்ப பல்லாக்கு, குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வாகனங்களில் பெருமாள் ஒவ்வொரு நாளும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

Story image

ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற திருத்தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய ரங்கநாதப் பெருமாளுக்கு சிறப்பு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருதேரோட்டத்தினை ஊராட்சி தலைவர் ஆனந்தஜோதிபால்ராஜ் வடம் பிடித்து தொடங்கி வைத்தார். திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

கோயிலைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் வலம் வந்த தேர் மீண்டும் நிலையடியை வந்தடைந்தது. 

இந்நிகழ்வில் கைங்கர்ய சபா உறுப்பினர்கள் நாகை.வெங்கடேசன், எஸ்.சந்தானகிருஷ்ணன், எஸ்.கண்ணன், சி.பி.பாலாஜி மற்றும் கிராமவாசிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.