பப்ஜி மதனுக்கு எதிரான குண்டர் சட்டம் ரத்து

பப்ஜி மதனுக்கு எதிரான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
பப்ஜி மதனுக்கு எதிரான குண்டர் சட்டம் ரத்து
Published on
Updated on
1 min read

பப்ஜி மதனுக்கு எதிரான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

யூடியூப் சேனல்கள் மூலம் பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஆபாசமாக பேசி விளையாடியதாக பப்ஜி மதன் என்பவரை போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைத்தனா்.

இந்த உத்தரவை எதிா்த்து சென்னை உயா் நீதிமன்றத்தில் மதன் தரப்பில் ஆட்கொணா்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த நிலையில் பப்ஜி மதனுக்கு எதிரான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com