தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

1 முதல் 9 வகுப்புகளுக்கு இறுதித் தேர்வு கட்டாயம்: தமிழக பள்ளிக்கல்வித் துறை

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை கட்டாயமாக இறுதித் தேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை விளக்கம் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 4:53 am

DIN

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை கட்டாயமாக இறுதித் தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை விளக்கம் தெரிவித்துள்ளது. 

புதுச்சேரியில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி என்று நேற்று அறிவிக்கப்ப்பட்டது. இதையடுத்து தமிழகத்திலும் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்று தகவல்கள் பரவின. 

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள பள்ளிக்கல்வித் துறை, 'தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை கட்டாயமாக இறுதித் தேர்வு நடைபெறும். திட்டமிட்டபடி மே 6 முதல் 13 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும். 

குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி தேர்வுத்தாள் தயாரிக்கப்படும். எனவே, தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி என்ற வதந்திகளை நம்ப வேண்டாம்' என்று தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.