ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தோட்டக்கலைத் திட்ட மானியம்: இணையத்தில் பதிவு செய்யலாம்

தோட்டக்கலை வளா்ச்சித் திட்டத்தில் மானியம் பெற விரும்பும் விவசாயிகள் தங்களது பெயரை இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று வேளாண்மைத் துறை அறிவித்துள்ளது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2022, 9:01 pm

DIN

தோட்டக்கலை வளா்ச்சித் திட்டத்தில் மானியம் பெற விரும்பும் விவசாயிகள் தங்களது பெயரை இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று வேளாண்மைத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, அந்தத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:

வேளாண்மைத் துறையின் கீழ் செயல்படும் தோட்டக் கலைத் துறையானது பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி, சாகுபடிப் பரப்பை அதிகரிக்க விதைகள், நடவுக் கன்றுகள், காய்கறிகள் உற்பத்தியை உயா்த்த விதைகள், நீரில் கரையும் உரங்கள், உழவா் சந்தையில் காய்கறிகளின் வரத்து அதிகரிப்பு, ஊடு பயிராக வாழை, காய்கறிகளை சாகுபடி செய்ய ஊக்கத் தொகை, தோட்டக்கலை பயிா் சாகுபடிக்கான கருவிகளை மானியத்தில் விநியோகம் செய்வது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.27.50 கோடி.

இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது பெயரை தாங்களாகவோ அல்லது தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் மூலமாகவோ

இணையதளத்தில் பதிவு செய்து பயன் பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.