சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தொடர்ந்து 20-வது நாளாக முழுக் கொள்ளளவுடன் மேட்டூர் அணை!

மேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து 20வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2022, 3:47 am

DIN

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து 20வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளிலும் தமிழகத்தில் காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறுகளின் நீர்பிடிப்புப் பகுதிகளிலும் பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக கடந்த 16 ஆம் தேதி மேட்டூர் அணை நிரம்பி முழுக் கொள்ளவான 120 அடியை எட்டியது. தொடர்ந்து 20 நாட்களாக அணை நிரம்பிய நிலையில் உள்ளது.

காவிரியில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கடந்த 20 நாட்களில் அணைக்கு 132 டி.எம்.சி. தண்ணீர் வந்துள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி 100 டி.எம்.சி வெள்ளநீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

நேற்று அதிகபட்சமாக மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 2,10,000 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணை மின் நிலையம், சுரங்கமின் நிலையம் மற்றும் எல்லீஸ்சேடல்(16கண் பாலம்) வழியாக வினாடிக்கு 2,10,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இன்று மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 2,40,000 கனஅடி வரை நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பாத்த நிலையில் காவிரியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையின் அளவு சற்று குறைந்தது. அதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் சற்று குறைந்து உள்ளது.

நேற்று மாலை வினாடிக்கு 2,10,000 கனஅடி வீதம் வந்துகொண்டிருந்த நீர் வரத்து இன்று காலை வினாடிக்கு 2,00,000 கனஅடியாக குறைந்துள்ளது. அணைக்கு நீர் வரத்து குறைந்தாலும் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2,10,000 கனஅடியாக நீடித்து வருகிறது. அணை மின்நிலையம் மற்றும் சுரங்க மின்நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000 கனஅடி வீதமும், எல்லீஸ்சேடலான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 1,87,000 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணையின் நீர் மட்டம் 120.05 அடியாகவும் நீர் இருப்பு 93.55 டி.எம்.சியாகவும் உள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் இடது கரையில் உள்ள வெள்ளக்கட்டுப்பாட்டு அறையில் நீர்வளத்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்கானிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.