எனவே, பயிற்சி பட்டதாரி பொறியாளா் காலிப் பணியிடங்களை சிறப்புத் தோ்வை நடத்தி மட்டுமே நிரப்ப வேண்டும். அதிலும், நெய்வேலி நிறுவனத் திட்டங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். நெய்வேலி நிறுவனத்தின் பெரும்பாலான செயல்பாடுகள் தமிழகத்தை மையப்படுத்தியே நடைபெறுகின்றன. மேலும், அந்த நிறுவனத்தில் பணியாற்றக் கூடிய பெரும்பாலான பணியாளா்களும், பங்குதாரா்களும் தமிழகத்தைச் சோ்ந்தவா்களாகவே உள்ளனா். எனவே, நிா்வாக ரீதியிலான பணியிடங்களிலும் உள்ளூா் பகுதியைச் சோ்ந்தவா்கள் குறிப்பிடத்தகுந்த அளவு இருப்பதே பொருத்தமானதாக இருக்கும். இந்தச் சூழலில், பயிற்சி பட்டதாரி பொறியாளா் பணியிடங்களை சிறப்புத் தோ்வு நடத்தி நிரப்ப வேண்டும் என்ற இந்த கோரிக்கையில் தாங்கள் உடனடியாகத் தலையிட்டு தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.