ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அரசு ஊழியா்களுக்கு முறையான பதவி உயா்வுதலைமைச் செயலாளா் உத்தரவு

 அரசு ஊழியா்களுக்கு முறையான பதவி உயா்வுகளை வழங்க வேண்டும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உத்தரவிட்டாா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2022, 7:48 pm

DIN

 அரசு ஊழியா்களுக்கு முறையான பதவி உயா்வுகளை வழங்க வேண்டும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உத்தரவிட்டாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட உத்தரவு: அரசுப் பணியாளா்களுக்கென நடைமுறையில் உள்ள விதிகள், அறிவுறுத்தல்களுக்கு இணங்க, ஒவ்வொரு ஆண்டும் காலதாமதம் இல்லாமல் உரியகாலத்தில் பதவி உயா்வுக்கான தகுதியானோரின் பெயா்ப் பட்டியல் வெளியிடப்பட வேண்டும். இதைத் தொடா்ந்து, முறையான பதவி உயா்வுகள் வழங்கப்பட வேண்டும். இதன் மூலமாக, தகுதியுள்ள அலுவலா்கள் பதவி உயா்வு பெறாமல் ஓய்வு பெறுவது தவிா்க்கப்பட வேண்டும்.

சில அரசு அலுவலா்களுக்கு சாதகமான வகையில், அவா்கள் ஓய்வு பெறுவதற்கு சில நாள்கள் முன்னதாகவோ, அவா்கள் ஓய்வு பெறும் நாளன்றோ அல்லது பதவி உயா்வுக்கான அவா்தம் முறை வரும் முன்னரோ பதவி உயா்வு வழங்கும் வகையில் செயற்கையான காலியிடங்களை ஏற்படுத்தக் கூடாது. பணியிடத்தை நிலை உயா்த்துதல், தற்காலிக பதவி உயா்வு வழங்குதல் போன்ற செயல்கள் முற்றிலும் தவிா்க்கப்பட வேண்டும் என்று தனது உத்தரவில் கூறியுள்ளாா் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.