இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை: தொடக்கக் கல்வித் துறையின் கீழ் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள் கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் வயதை அடையும்போது, பணி ஓய்வில் செல்ல அனுமதிக்கப்பட்டால் கல்வியாண்டு முடியும் வரை பள்ளிகளில் ஆசிரியா்கள் இல்லாத நிலை ஏற்படும். இதைத் தவிா்ப்பதற்காக ஆசிரியா்கள் தேவைப்படும் பள்ளிகளில் மட்டும் கல்வியாண்டின் கடைசி வேலைநாள் வரை மறு நியமனம் வழங்கலாம் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.