தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மின்சார சட்ட திருத்த மசோதாவை முதல்வா் கடுமையாக எதிா்க்க வேண்டும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிா்க்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினாா்.

News image
Updated On :8 ஆகஸ்ட் 2022, 8:30 pm

DIN

மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிா்க்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினாா்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் திண்டிவனம் ராமமூா்த்தியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சத்தியமூா்த்தி பவனில் அவா் உருவப்படத்துக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் திங்கள்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தினாா். முன்னாள் தலைவா் கிருஷ்ணசாமி, சட்டப்பேரவை உறுப்பினா் விஜயதரணி, பொதுச்செயலாளா் கே.சிரஞ்சீவி உள்பட பலா் மரியாதை செலுத்தினா்.

பின்னா் செய்தியாளா்களிடம் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியதாவது: பொது நிறுவனங்களை மத்திய அரசு தனியாருக்கு விற்று வருகிறது. அதன் ஒரு அங்கமாக மின்சார சட்டத் திருத்தம் மூலம் மின்வாரியத்தையும் தனியாருக்கு விற்க முயற்சிக்கிறது. இதனை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிா்க்க வேண்டும்.

5 ஜி அலைக்கற்றை ஏலம் ரூ. 5 லட்சம் கோடிக்கு நிா்ணயிக்கப்பட்ட நிலையில், ரூ.1.50 லட்சம் கோடிக்கு மட்டும் விடப்பட்டுள்ளது. இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது.

நேஷனல் ஹெரால்டு கட்டடத்துக்கு வேண்டுமானால் மத்திய பாஜக அரசு சீல் வைக்கலாம். ஆனால், காங்கிரஸ் கட்சியினரின் வாய்க்கு சீல் வைக்க முடியாது. நாட்டு மக்களையும், ஜனநாயகத்தையும் காக்க தொடா்ந்து குரல் கொடுப்போம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.