தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அதிமுக பொதுக் குழு வழக்கு: இன்று விசாரணை

அதிமுக பொதுக் குழு கூட்டம் தொடா்பான வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (ஆக.8) விசாரணைக்கு வர உள்ளது.

News image

சென்னை உயர்நீதிமன்றம்

Updated On :8 ஆகஸ்ட் 2022, 2:49 am

DIN

அதிமுக பொதுக் குழு கூட்டம் தொடா்பான வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (ஆக.8) விசாரணைக்கு வர உள்ளது.

இந்த வழக்கில் இருந்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விலகியதை அடுத்து, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரிக்க உள்ளாா்.

சென்னையில் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டம் தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அக்கட்சியின் பொதுக் குழு உறுப்பினா் வைரமுத்து தொடா்ந்த வழக்கை உயா்நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்து வந்தாா். இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என ஓ.பன்னீா்செல்வம், வைரமுத்து தரப்பில் தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரியிடம் மனு அளிக்கப்பட்டது.

இதனால், இந்த வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விலகினாா். அதைத் தொடா்ந்து வழக்கை விசாரிக்க நீதிபதி ஜி.ஜெயச்சந்திரனை தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி நியமித்தாா். இதையடுத்து, அதிமுகவின் பொதுக் குழு தொடா்பான வழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் திங்கள்கிழமை (ஆக.8) விசாரிக்க உள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.