'விடுதலைப் போரில் தமிழகம்' - புகைப்படக் கண்காட்சியை திறந்துவைத்தார் முதல்வர்

சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் 'விடுதலைப் போரில் தமிழகம்' என்ற புகைப்படக் கண்காட்சியினை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து பார்வையிட்டார்.
'விடுதலைப் போரில் தமிழகம்' - புகைப்படக் கண்காட்சியை திறந்துவைத்தார் முதல்வர்
Published on
Updated on
1 min read

சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் 'விடுதலைப் போரில் தமிழகம்' என்ற புகைப்படக் கண்காட்சியினை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து பார்வையிட்டார்.

நாட்டின் சுதந்திர நாளை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றினார். 

இதையடுத்து சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்துக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு புதிதாக நிறுவப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் முழு உருவச் சிலையினை திறந்துவைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து 'விடுதலைப் போரில் தமிழகம்' என்ற தலைப்பில் விடுதலைப் போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் அடங்கிய புகைப்படக் கண்காட்சியினை திறந்துவைத்து பார்வையிட்டார். நாட்டின் சுதந்திரத்திற்கு அவர்கள் செய்த தியாகத்தைப் போற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com