

தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளில் ஆகஸ்ட் 14ஆம் தேதி ஒருநாள் மட்டும் விற்பனை செய்யப்பட்ட விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சுதந்திர நாளையொட்டி ஆகஸ்ட் 15ஆம் தேதி மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிப்பது வழக்கம். இதையொட்டி, முந்தைய நாளே இரண்டு நாள்களுக்கு தேவையான மதுபானங்களை வாடிக்கையாளர் வாங்குவதும் வழக்கமான ஒன்றுதான்.
இந்நிலையில், ஆகஸ்ட் 14ஆம் தேதி ஒருநாளில் மட்டும் தமிழகத்தில் ரூ. 273 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதில், மதுரை மண்டலத்தில் ரூ. 58.26 கோடி, சென்னை மண்டலத்தில் ரூ. 55.77 கோடி, சேலம் மண்டலத்தில் ரூ. 54.12 கோடி, திருச்சி மண்டலத்தில் ரூ. 53.48 கோடி, கோவை மண்டலத்தில் ரூ. 52.29 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.