சென்னை: அனைவரும் ஒன்றுபட வேண்டும், நீக்கப்பட்டவர்கள் சேர்க்கப்பட வேண்டும்,இசைந்து வருபவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக் குழு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்த நிலையில், தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம்.
ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
அப்போது அவர் கூறியதாவது, எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆன்மாக்களுக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொள்ள இந்த நல்ல நேரத்தில் கடமைப்பட்டிக்கிறோம்.
சென்னை உயர் நீதிமன்றம், வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கியுள்ளது. இது அதிமுகவுக்குக் கிடைத்த முழுமையான வெற்றி. இந்த வெற்றியை ஒன்றரைக் கோடி தொண்டர்களுக்குக் காணிக்கையாக்குகிறேன்.
அதிமுகவை தொண்டர்களின் இயக்கமாக எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் உருவாக்கினர். தொண்டர்கள் என்ன விரும்பினார்களோ அது நடந்துள்ளது என்று கூறினார்.
மேலும் அனைவரும் ஒன்றுபட வேண்டும், நீக்கப்பட்டவர்கள் சேர்க்கப்பட வேண்டும்,இசைந்து வருபவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருமலையில் 70,001 பக்தா்கள் தரிசனம்

பயிற்சிப் பணியாளா் மீது பாலியல் துன்புறுத்தல்: தனியாா் நிறுவன சிஇஓ மீது புகாா்
அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

கிரேட்டா் நொய்டாவில் இருவா் சடலமாக மீட்பு
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

