/

தமிழ்நாடு

சென்னை, 11 மாவட்டங்களில் மழை! இன்றைய செய்திகள் ஜூலை 4 - நேரலை

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்.

சென்னை, 11 மாவட்டங்களில் மழை! இன்றைய செய்திகள் ஜூலை 4 - நேரலை

மழை - பிரதிப் படம்

Updated On :4 ஜூலை 2026, 12:09 pm IST
6:39 am, 4 ஜூலை 2026

திருவண்ணாமலை நிர்வாகிகளுடன் இபிஎஸ் தீவிர ஆலோசனை!

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசணை மேற்கொண்டு வருகின்றனர்.

6:21 am, 4 ஜூலை 2026

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 11 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

6:21 am, 4 ஜூலை 2026

சட்டம் - ஒழுங்கு, குதிரை பேரம், அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டு... ஆளுநரிடம் பாஜக புகார்!

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை மற்றும் குதிரை பேரம், அமைச்சர் விஸ்வநாதன் விவகாரம் ஆகியவை குறித்து ஆளுநரிடம் பாஜக நிர்வாகிகள் புகார் கொடுத்துள்ளனர்.

6:21 am, 4 ஜூலை 2026

கரூர் சம்பவம்! ஆதவ் அர்ஜுனா பேசியது ஏற்கத்தக்கதல்ல: இந்திய கம்யூ.

முதல்வர் விஜய் குறித்து முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் விமர்சனத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், கரூர் சம்பவம் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு அதிருப்தியும் தெரிவித்துள்ளனர்.

6:21 am, 4 ஜூலை 2026

ஃபீனிக்ஸ் பறவையென மீண்டெழுகிறோம்: மு.க. ஸ்டாலின்

திமுக மீண்டும் ஃபீனிக்ஸ் பறவைபோல் மீண்டு வருமென கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

6:14 am, 4 ஜூலை 2026

18 பேர் பலி! ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற இன்று நடவடிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே அமோனியா கசிந்த ஆலையில் இருந்து அமோனியா வாயுவை பாதுகாப்பாக வெளியேற்ற இன்று நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.