தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

5 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கோவை, நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இரண்டு நாள்கள் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2022, 7:41 pm

DIN

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கோவை, நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இரண்டு நாள்கள் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை (ஆக.21,22) ஆகிய இரண்டு நாள்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழைக்கும், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூா் ஆகிய 5 மாவட்டங்களில் பலத்த மழைக்கும் வாய்ப்புள்ளது.

சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.