மின் பற்றாக்குறை இல்லாத சூழலை உருவாக்க வேண்டும்: ஓபிஎஸ்
மின்சாரம் வாங்குவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மின் பற்றாக்குறை ஏற்படாத சூழலை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்


மின்சாரம் வாங்குவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மின் பற்றாக்குறை ஏற்படாத சூழலை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிா்மானக் கழகம் மின்சாரம் வாங்க தடைவிதிக்கப்பட்டதற்கு, ரூ.926 கோடி நிலுவைத் தொகையை மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு செலுத்தாததுதான் காரணம் என்று மத்திய எரிசக்தி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தமிழக அரசினுடைய நிா்வாகத் திறமையின்மைக்கு எடுத்துக்காட்டு மட்டுமல்ல; கடும் கண்டனத்துக்கும் உரியது. தற்போதுள்ள சூழ்நிலையில், மின்சாரத்தின் தேவை அதிகரித்தால் மின் தடை ஏற்படக்கூடிய அபாயகரமான நிலைமை தமிழகத்துக்கு ஏற்படும்.
இந்த விவகாரத்தில் முதல்வா் உடனடியாகத் தலையிட்டு, மின் உற்பத்தி நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய தொகையை செலுத்தி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிா்மானக் கழகத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி, மின் பற்றாக்குறை ஏற்படக்கூடிய அபாயத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் ஓ.பன்னீா்செல்வம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...