முந்தைய அரசுகளின் திட்டங்கள் தொடரும்! பேரவையில் முதல்வர் விஜய் உறுதிநம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி! தவெக அரசுக்கு 144 பேர் ஆதரவு! நம்பிக்கை வாக்கெடுப்பு: திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு! குதிரை வேகத்தில் செயல்படும் அரசு; குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசு அல்ல! விஜய் பேச்சுபுஸ்பா பட பாணியில் சோபா ஆட்சி செய்யும் விஜய்! உதயநிதி கடும் விமர்சனம்! நம்பிக்கை வாக்கெடுப்பு! பேரவைக்கு வராமல் மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பு!நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக நடுநிலை! - எம்.எல்.ஏ. போஜராஜன்தவெகவில் குதிரை பேரம் நடந்தது; ஜோதிடருக்கு எதற்கு அரசுப் பதவி? பிரேமலதா
/

தொடர் மழை... குமுளி மலைப்பாதையில் மரம் முறிந்து போக்குவரத்து பாதிப்பு

தேனி மாவட்டம் தொடர் மழை குமுளி மலைச்சாலையில் தொடர் மழை காரணமாக மரம் முறிந்து விழுந்ததால்  போக்குவரத்து பாதிப்பு புதன்கிழமை ஏற்பட்டது.

News image

குமுளி மலைச்சாலையில் முறிந்து விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் போலீசார்.

Updated On :24 ஆகஸ்ட் 2022, 1:30 pm IST

கம்பம்: தேனி மாவட்டம் தொடர் மழை குமுளி மலைச்சாலையில் தொடர் மழை காரணமாக மரம் முறிந்து விழுந்ததால் புதன்கிழமை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் கம்பம்,  கூடலூர் பகுதிகளில் இரவு முழுவதும் மழை பெய்தது, இதனால் குமுளி லோயர் கேம்ப் மலைச்சாலையில் புதன்கிழமை அதிகாலை 1 ஆம் பாலம் அருகே வனப்பகுதியில் உள்ள மரக்கிளை முறிந்து நெடுஞ்சாலையில் விழுந்தது, இதனால் குமுளியிலிருந்து கம்பம் வரும் வாகனங்கள், செல்கின்ற வாகனங்கள் மலைச்சாலையில் நின்றன.

குமுளி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அல்போன்ஸ் ராஜா தலைமையில் போலீசார் விரைந்து சென்று முறிந்து விழுந்த மரக்கிளைகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். மேலும், தொடர் மழை பெய்து வருவதால் மலைச்சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெரியாறு அணையில் மழை
முல்லைப் பெரியாறு அணையில் கடந்த சில நாள்களாக மழை பெய்யவில்லை, இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பெரியாறு அணையில் 18.22 மில்லிமீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 13.2 மி.மீ., மழையும் பெய்தது, புதன்கிழமை நிலவரப்படி அணையில் நீர் மட்டம், 135.95 அடியாகவும் (மொத்த உயரம் 152 அடி), அணைக்குள் நீர் இருப்பு, 6,105 மில்லியன் கன அடியாகவும், அணைக்குள் நீர் வரத்து வினாடிக்கு, 935.14 கன அடியாகவும், தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் விநாடிக்கு, 933.,00 கன அடியாகவும் இருந்தது.

Story image

தேனி மாவட்டம் சுருளி அருவியில் 23 ஆவது நாளாக தொடரும் வெள்ளப்பெருக்கு.

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் 23 ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் பக்தர்கள் குளிக்க தடை நீட்டிப்பு செய்யப்பட்டது, மேலும் அருவியின் நீர் வரத்தை புலிகள் காப்பகத்தினர் கண்காணிப்பு செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.