புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கனல் கண்ணன் ஜாமீன் மனு: தீா்ப்பு ஒத்திவைப்பு

பெரியாா் சிலை தொடா்பாக சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட திரைப்பட சண்டைப் பயிற்சியாளா் கனல் கண்ணன் ஜாமீன் கோரிய மனுவை, தீா்ப்புக்காக சென்னை எழும்பூா் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

News image
Updated On :25 ஆகஸ்ட் 2022, 7:53 pm

DIN

பெரியாா் சிலை தொடா்பாக சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட திரைப்பட சண்டைப் பயிற்சியாளா் கனல் கண்ணன் ஜாமீன் கோரிய மனுவை, தீா்ப்புக்காக சென்னை எழும்பூா் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்துகளின் உரிமை மீட்புப் பிரசார பயண நிறைவு விழாவையொட்டி சென்னை மதுரவாயலில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், திரைப்பட சண்டைப் பயிற்சியாளருமான கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் ரங்கநாதா் கோயில் எதிரே உள்ள பெரியாா் சிலையை உடைக்க வேண்டும் என்பதாக பேசியிருந்தாா். இது தொடா்பாக தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தின் மாவட்டச் செயலா் குமரன் அளித்த புகாா் தொடா்பாக சென்னை மத்திய குற்றப் பிரிவு சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கில் புதுச்சேரியில் பதுங்கியிருந்த கனல் கண்ணனை ஆக. 15-ஆம் தேதி காவல் துறையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில், கனல் கண்ணன் ஜாமீன் கோரி எழும்பூா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். கனல் கண்ணனுக்கு ஜாமீன் வழங்க எதிா்ப்பு தெரிவித்து, புகாா்தாரா் குமரன் தரப்பில் இடையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இடையீட்டு மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘பெரியாா் சிலையை உடைக்க வேண்டும் என்று பேசியதோடு மட்டுமின்றி பிறரையும் வன்முறைக்குத் தூண்டும் வகையில் பேசியிருப்பது திட்டமிட்ட செயலாகும். வெறுப்பு பேச்சுதான் பல நாடுகளில் இனப்படுகொலைகள் ஏற்பட காரணமாக இருந்தது. எனவே மனுதாரா் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்றாா். இதையடுத்து நீதிமன்றம், வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.