தமிழக நிதி அமைச்சர் கார் மீது காலணி வீசிய வழக்கில் மேலும் 2 பேருக்கு ஜாமீன் வழங்கி மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை விமான நிலையத்தில் தமிழக நிதி அமைச்சரின் காரை முற்றுகையிட்டு பாஜகவினா் போராட்டம் நடத்தினா். அப்போது அவரது காா் மீது காலணி வீசப்பட்டது. இச் சம்பவம் தொடா்பாக அவனியாபுரம் போலீஸாா் 24 போ் மீது வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கில் பாஜகவை சோ்ந்த குமாா், பாலா, கோபிநாத், மற்றொரு கோபிநாத், ஜெயகா்ணா, முகமதுயாகூப், தனலெட்சுமி, சரண்யா, தெய்வானை ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இவா்கள் ஜாமீன் கோரி, மதுரை நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் (எண் 6) மனுக்களை தாக்கல் செய்திருந்தனா். ஆகஸ்ட் 22-ல் விசாரித்த நீதித்துறை நடுவா் சந்தானகுமாா், தனலெட்சுமி, சரண்யா, தெய்வானை ஆகியோரது ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தாா். குமாா் உள்பட 6 பேருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா்.
மேலும், தனலெட்சுமி உள்பட மூவரை காவலில் எடுத்து விசாரிப்பதற்காக காவல் துறை தரப்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணைக்கு வந்தது.
இதையும் படிக்க: அபுதாபி மாஸ்டர்ஸ் செஸ்: இந்திய வீரர் சாம்பியன்
இந்நிலையில் கைதான தனலட்சுமி, தெய்வானை ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி 6வது நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வானதி சீனிவாசன் வேட்புமனு! ராஜஸ்தான் முதல்வர், அண்ணாமலை பங்கேற்பு!

விமான நிலையத்தில் பிறந்த நாளைக் கொண்டாடிய ரஷ்மிகா!
போடியில் ஓபிஎஸ் வேட்புமனு தாக்கல்!

ஒவ்வொரு நெருக்கடியிலும் ஏழைகள் முதலில் பலியாவது ஏன்? பிரதமருக்கு ராகுல் கேள்வி!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


