காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஓய்வு பெற்ற மத்திய பாதுகாப்பு படை அதிகாரி வீட்டில் 70 பவுன் நகைகள் திருட்டு

 சென்னை விருகம்பாக்கத்தில் ஓய்வு பெற்ற மத்திய பாதுகாப்பு படை அதிகாரி வீட்டில் 70 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2022, 8:19 pm

DIN

 சென்னை விருகம்பாக்கத்தில் ஓய்வு பெற்ற மத்திய பாதுகாப்பு படை அதிகாரி வீட்டில் 70 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன.

சென்னை விருகம்பாக்கம், வெங்கடேஸ்வரா நகா் முதல் தெருவைச் சோ்ந்தவா் குமாா் சுப்ரமணியன் (61). ஓய்வு பெற்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரியான இவா், விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றியுள்ளாா். சுப்பிரமணியன், தனது மனைவி லட்சுமியுடன் கடந்த 21-ஆம் தேதி வட மாநிலங்களுக்கு சுற்றுலா சென்றாா்.

இவா்களது மகன் புவனேஸ்வரன் பணி நிமித்தமாக இரு நாள்களுக்கு முன்பு மகாராஷ்டிர மாநிலம் புணேவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளாா்.

இந்நிலையில், குமாா் சுப்பிரமணியனின் வீட்டை பாா்ப்பதற்காக வெள்ளிக்கிழமை, அவரது உறவினா் சுஜாதா வந்தாா். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

அவா், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தாா். விருகம்பாக்கம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விசாரணை செய்தனா். அப்போது 70 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்கம், ஒரு மடிக்கணினி ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.