எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தமிழக மீனவர்கள் 6 பேர் கைது

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேருடன் ஒரு விசைப்படகை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2022, 3:43 am

DIN

ராமேஸ்வரம்: கச்சத்தீவு நெடுந்தீவுக்கிடையே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 6 பேருடன் ஒரு விசைப்படகை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் இருந்து  நேற்று  465 விசைப்படகுகளில் 2,500 க்கும் மேற்பட்ட மீனவர்கள்  மீன்பிடி அனுமதிச்சீட்டு பெற்று மீன்பிடிக்க சென்றனர்.

இன்று அதிகாலையில் கச்சத்தீவு நெடுந்தீவுக்கிடையே மீன்பிடித்துக்கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த நிஷாந்தன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகையும் நிஷாந்த், ஆண்டி ,கருணாநிதி, உலகநாதன், சூசைவியாகுலம், ஜேசு ஆகிய 6 மீனவர்களை கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர்.

படகு பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீனவர்கள் 6 பேர் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க உள்ளதாக இலங்கை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.