தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

ஈரோடு பகுதியில் வீடுகளில் வெள்ளநீர்: மக்கள் கடும் அவதி, மின்னணு சாதனங்கள் சேதம்

ஈரோடு கருக்கம்பாளையம் காலனி பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை தண்ணீா் புகுந்ததால் வீடுகளில் இருந்த அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் சேதமடைந்துள்ளன.

News image
Updated On :29 ஆகஸ்ட் 2022, 10:59 pm IST


ஈரோடு  46 புதூர், கருக்கம்பாளையம் காலனி பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை தண்ணீா் புகுந்ததால் வீடுகளில் இருந்த அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் சேதமடைந்துள்ளன.

Story image

ஈரோடு கருக்கம்பாளையம் காலனி பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த மழை தண்ணீா்.

ஈரோட்டில் கடந்த 4 நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு மூன்று மணி நேரத்திற்கு மேலாக பெய்த கன மழையால் அப்பகுதியில் செல்லும் பெரும் பள்ளம், வாய்க்கால் மற்றும் கீழ்பவானி கிளை வாய்க்கால்கள் பாசனத்திற்காக தண்ணீர் செல்லும் நிலையில் மழை நீரும் கலந்ததால் வாய்க்காலில் நீர் நிரம்பி வெள்ளம் வெளியேறியது.

Story image

வீடுகளுக்குள் புகுந்த மழை தண்ணீா்.

இதனால்  46 புதூர்,கருக்கம்பாளையம் காலனி பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை தண்ணீா் புகுந்ததால் மக்கள் கடும் அவதியடைந்தனா். இதனால் வீடுகளில் இருந்த அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் சேதமடைந்துள்ளன. 

Story image

பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேறும் மக்கள். 

Story image
Story image

மழைநீர் வடிந்த பகுதியில் நின்று வேடிக்கை பார்க்கும் மக்கள்

மேலும், மூன்று நாள்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளையும், வெள்ள நீர் குடியிருப்பு பகுதியில் புகாமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.